Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, July 26, 2016

    பழைய ஓய்வூதிய திட்டம் எப்போ வரும்?

    'அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும்' என, சட்டசபையில் தி.மு.க., எழுப்பிய கேள்விக்கு, ஆளுங்கட்சி தரப்பில் பதில் தெரிவிக்கவில்லை.


    சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., - வேலு: தமிழக அரசு அலுவலர் களுக்கு, புதிய ஊதிய விகிதத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, தகுந்த பரிந்துரை அளிப்பதற்காக, உயர் அலுவலர்கள் குழு அமைக்கப்படும் என, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு, எப்போது குழு அமைக்கும்; குழு பரிந்துரைகள் எப்போது நிறைவேற்றப்படும்; இதற்கு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? அமைச்சர் பன்னீர்செல்வம்: குழு அமைக்கப்படும் போது, எவ்வளவு காலம் என, நிர்ணயிக்கப்படும். அதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்; குழு அமைப்பதற்கு முன், எவ்வாறு நிதி ஒதுக்க முடியும்? வேலு: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, பரிந்துரை செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் காலம் முடிந்து விட்டதா; பரிந்துரை செய்ததா; பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது அமலுக்கு வரும்? அமைச்சர் பன்னீர்செல்வம்: அந்த குழுவிற்கு வழங்கப்பட்ட, மூன்று மாத கால அவகாசம் முடிந்து விட்டது. மீண்டும், மூன்று மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. துரைமுருகன்: மூன்று பேர் குழு அமைத்தீர்கள். அதில், இருவர் ராஜினாமா செய்து விட்டனர். ஒருவர் மட்டும் என்ன செய்யப் போகிறார்?இதற்கு ஆளுங்கட்சி தரப்பில், பதில் எதுவும் கூறப்படவில்லை.

    No comments: