Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, July 25, 2016

    அடிப்படை வசதிகளின்றி மாணவிகள் தவிப்பு!

    திருமங்கலம் மதுரை காமராஜ் பல்கலை உறுப்பு கல்லுாரியில் இடநெருக்கடி மற்றும் அடிப்படை வசதிகள் இன்றி மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். திருமங்கலம் அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் 2012 முதல் செயல்படும் கல்லுாரியில் பி.காம்., பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.எஸ்.சி., கணிதம் பாடப் பிரிவுகளில் 600 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.


    இங்கு மொத்தம் 12 வகுப்பறைகள் உள்ளன. இவற்றில் தான் 600 பேரும் அமர்ந்து நெருக்கடியில் கல்வி பயில்கின்றனர். ஆசிரியர்களுக்கு &'ஸ்டாப் ரூம்&' வசதி இல்லை. இரு துறை ஆசிரியர்களுக்கு ஒரே ஸ்டாப் ரூம் ஒதுக்கப்பட்டுள்ளது. 300 மாணவியர் படிக்கும் இந்த வளாகத்தில் தனிக் கழிப்பறை வசதி இல்லை. பள்ளி வளாக கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர். அதிலும் தண்ணீர் வராததால் அவர்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது.


    பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: 

    மாணவர் சேர்க்கையில் மட்டும் குறியாக பல்கலை உள்ளது. கட்டணம் செலுத்தி படிக்கும் அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. நுாலக வசதி கூட இல்லை. கழிப்பறை வசதி இன்றி மாணவியர் பரிதவிக்கின்றனர். பல முறை பல்கலைக்கு தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. 

    ஆசிரியர்களுக்கு ஜூன் சம்பளம் இதுவரை கிடைக்காததால் அதிருப்தியில் உள்ளனர். பி.காம்., பி.ஏ., ஆங்கிலம், தமிழில் மேலும் ஒரு வகுப்பு துவங்க மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இட நெருக்கடிக்கு தீர்வு காணாமல் மேலும் மாணவர்களை சேர்ப்பதால் பிரச்னை ஏற்படும், என்றார்.

    No comments: