Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, July 29, 2016

    ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர ஆணை!

    அரசு மேல்நிலைப் பள்ளிகளில், மணி நேர சம்பள அடிப்படையில் பணியாற்றிய 25 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்வர் நாராயணசாமி பணி நிரந்தர ஆணை வழங்கினார்.


    புதுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக, மணி நேர அடிப்படையில் தொழிற்கல்வி பயிற்றுநர்களாக பணியாற்றி வந்த 25 பேர், பணி நிரந்தரம் செய்யப்பட்டு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபை வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடந்தது. அவர்களுக்கு, பணி நியமன ஆணையை முதல்வர் நாராயணசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன், கல்வித்துறை செயலர் அருண்தேசாய், கல்வித்துறை இயக்குனர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது, முதல்வர் நாராயணசாமி கூறும்போது, 12 ஆண்டுகள் அரசில் பணியாற்றியவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யும் கடமை எங்களுக்கு உள்ளது. பணிநிரந்தரம் மட்டுமின்றி, அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கொடுப்பதையும் அரசு பரிசீலித்து வருகிறது.

    அரசு ஊழியர்கள் தங்களது கடமையை சரியாக செய்ய வேண்டும் என்று கட்டளையிடும் அரசு, அவர்களுக்கான உரிமையையும் கொடுக்கும் என்றார்.

    No comments: