Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, July 7, 2016

    ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தக்கோரி உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு.

    தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அந்தந்த மாவட்டத் தலைநகரில் மே மாதம் கோடை விடுமுறையில் நடத்துவது வழக்கம். ஆனால் இந்தாண்டு; சட்டமன்றத்திற்கான தேர்தல் மே மாதத்தில் நடந்ததால் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறவில்லை. தற்பொழுது புதிய அரசு அமைந்து விட்ட நிலையிலும் மாறுதல் கலந்தாய்விற்கான எவ்வித அறிவிப்பையும் கல்வித்துறை வெளியிடாததால் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க வருகிற வெள்ளிக்கிழமை மாநிலந்தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுக்குழு முடிவெடுத்துள்ளது.


    இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத்தலைவர் ஜோசப்ரோஸ், மாவட்டத் தலைவர் தாமஸ் அமலநாதன், மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன், மாவட்டப் பொருளாளர் குமரேசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு வெளிப்படையான பொது மாறுதல் கலந்தாய்வை ஒவ்வொரு மே மாத விடுமுறையிலும் நடத்துவது வழக்கம். கலந்தாய்வில் பங்கு பெற விரும்பும் ஆசிரியர்களிடம் ஏப்ரல் மாத இறுதிக்குள் மாறுதல் விண்ணப்பம் உதவித் தொடக்கக்கல்வி அலவலகத்தால் பெறப்பட்டு மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்படும். மாவட்டத் தொடக்கக்கல்வி அலுவலரால் பணியிட மூப்பின் அடிப்படையில் ஒன்றியம் வாரியாக ஆசிரியர் பட்டியலும் காலிப் பணியிட விபரமும் வெளியிடப்படும். இதில் ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட காலிப் பணியிடங்களை பணியிட மூப்பின் அடிப்படையில் வெளிப்படையான கலந்தாய்வின் மூலம் பெற்றுக்கொள்வர். மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் வருகிற கல்வி ஆண்டின் முதல் நாளில் தாங்கள் மாறுதல் பெற்ற பள்ளியில் புதிதாக பணியேற்றுக் கொள்வார்கள். இதனால் மாணவர்கள் நலன் பாதிக்கப்படாமல் காக்கப்பட்டது. ஆசிரியர்களும் தங்கள் குடும்பங்களை எளிதாக புதிய இடத்திற்கு இடம்பெயர்வு செய்வதற்கு வசதியாகவும் இருந்தது. கடந்தாண்டு சரியான திட்டமிடல் இல்லாததால் பள்ளி திறந்த பின்பு மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. இதனால் ஆசிரியர்கள் புதிய இடங்களில் பணியேற்பதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானர்கள். அக்கலந்தாய்விலும் அரசாணைகளையும், செயல் முறைகளையும் புறந்தள்ளிவிட்டு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் தலையீட்டால் பல்வேறு காலிப் பணியிடங்கள் மறைக்கப்பட்டதால் நியாயமாக கலந்தாய்வில் பங்கேற்ற மூத்த ஆசிரியர்கள் உரிய பணியிடங்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். இதனால் ஆசிரியர் இயக்ககங்களில் கடுமையான எதிர்ப்பை கல்வித்துறை எதிர் நோக்க வேண்டியிருந்தது. எனவே இந்தாண்டாவது வெளிப்படையாகவும், நேர்மையாகவும் மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தமிழக அரசையும், கல்வித்துறையையும் நாங்கள் பல முறை வலியுறுத்தி வந்தோம். ஆனால் சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி கல்வித்துறை நாள் கடத்தி வந்தது. தற்பொழுது புதிய அரசு பொறுப்பேற்று ஒரு மாத காலத்திற்கு மேலாகிறது. பள்ளிகளும் திறந்து நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இதுவரை மாறுதல் குறித்து எவ்வித அறிவிப்பும் கல்வி துறையால் வெளியிடப்படவில்லை. பள்ளிகள் திறந்த நிலையில் கல்வி துறை மௌனம் சாதிப்பது என்பது வெளி மாவட்டம் மற்றும் ஒன்றியங்களுக்கு மாறுதல் கோரி பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இடமாறுதல் நடைபெறாததால் ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களை மாற்று இடங்களுக்கு குடி அமர்த்துவதிலும், தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ப்பதிலும் குழப்பம் அடைந்துள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் கருதி பொது மாறுதல் கலந்தாய்வை நடத்துவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிடக் கோரி மாநிலம் முழுமைக்கும் உள்ள உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என கடந்த ஜூலை 2 மற்றும் 3ந் தேதிகளில் சிதம்பரத்தில் நடந்த எங்கள் இயக்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் முடிவாற்றப்பட்டுள்ளது. எனவே தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக வருகிற 8-ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் உள்ள உதவித் தொடக்கக்கல்வி அலுவலகங்கள் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். சுமார் 350க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் முன்பாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.

    No comments: