Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 8, 2016

    கல்லூரி பேராசிரியர்களுக்கு இனி சொகுசு பணி கிடையாது

    உயர்கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்லுாரி பேராசிரியர்களின் வேலை நேரத்தை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளை அனுப்பும்படி பல்கலை மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


    நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் தொழில்நுட்ப கல்லுாரிகள், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மூலமும்; பல்கலைகள், பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி., மூலமும் நிர்வகிக்கப்படுகின்றன. பேராசிரியர்களின் பணி நியமனம், சம்பளம், ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை, கல்லுாரி, பல்கலைகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் போன்றவற்றுக்கு, யு.ஜி.சி., யிலிருந்து நிதி வழங்கப்படுகிறது.

    ஆனால், உயர்கல்வி நிறுவனத்தில் உள்ள பேராசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் குறைந்த நேரமே பணியாற்றுவதாகவும்; உயர்கல்வியின் தரத்தை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.இதையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் ஆய்வுக் கூட்டத்துக்கு பின், பேராசிரியர் பணி நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன்படி உதவிப் பேராசிரியர்கள் வாரத்திற்கு 16 மணி நேரத்துக்கு பதில் 18 மணி நேரம் பணியாற்ற வேண்டும் என மாற்றம் வர உள்ளது. இதேபோல் பேராசிரியர்களுக்கும் வேலை நேரம் அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.இதுகுறித்து கல்வியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

    No comments: