Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 23, 2016

    ஒரே ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்

    ''இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' சார்பில், ஆண்டிற்கு, 18 ராக்கெட்களை விண்ணில் செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என, இஸ்ரோ தலைவர் கிரண்குமார் தெரிவித்து உள்ளார். பி.எஸ்.எல்.வி., - சி 34 ராக்கெட் மூலம், 'இஸ்ரோ'வின் கார்டோசாட்- 2; அமெரிக்காவின், -13; கனடா, இரண்டு; ஜெர்மனி, இந்தோனேஷியா தலா ஒன்று; சத்யபாமா பல்கலை ஒன்று; புனே பொறியியல் கல்லுாரி ஒன்று என, மொத்தம், 20 செயற்கைக்கோள்கள், வெற்றிகரமாக, நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டன.


    இந்த வெற்றி குறித்து, 'இஸ்ரோ' தலைவர் கிரண்குமார் அளித்த பேட்டி: ராக்கெட் ஏவும் செலவை குறைக்க, செயற்கைக்கோளின் வடிவம் மற்றும் தொழில்நுட்பத்தில் மாற்றம், எடை குறைத்தல் உள்ளிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமக்கு, பூமி ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, கடல்சார் ஆராய்ச்சி, பருவநிலை கண்டறிதல் என, 70 செயற்கைக்கோள்களின் தேவை உள்ளது. நம்மிடம், 35 செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளன. தற்போது, ஆண்டிற்கு, 12 ராக்கெட்களை விண்ணில் செலுத்தி வருகிறோம். இதை, 18 ராக்கெட்களாக அதிகரிக்க, நடவடிக்கை எடுத்து வருகிறோம். ராக்கெட் ஏவும் நடவடிக்கை அதிகரித்து வருவதால், ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு கட்டடம் ஒன்றை, புதிதாக கட்ட திட்டமிட்டுள்ளோம். கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், செயற்கைக்கோள்களை உருவாக்க வாய்ப்பளிக்கப்படும். இதற்கான அனைத்து உதவிகளும், 'இஸ்ரோ' சார்பில் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: