Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 30, 2016

    ஊதிய உயர்வில் அதிருப்தி: ஜூலை 7-இல் பி.எம்.எஸ். ஆர்ப்பாட்டம்

    இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலர் விர்ஜேஷ் உபாத்தியாயா, தில்லியில் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக ஊழியர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளைப் புறக்கணித்துவிட்டு அந்தப் பரிந்துரைகளை அப்படியே ஏற்கும் மத்திய அரசின் முடிவு, எங்களை அதிருப்தியடைய வைத்துள்ளது. அதனால் தொழில்துறையில் அமைதி சீர்குலைந்தால், அதற்கு மத்திய அரசே பொறுப்பாகும்.


    மேலும், குறைந்தபட்ச ஊதியத்துக்கும், அதிகபட்ச ஊதியத்துக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது. அதை மாற்றி, நாடு முழுவதும் தனியார் துறை உள்பட அனைத்து துறைகளிலும் குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18,000-மாக அறிவிக்க வேண்டும்.

    கடைகள் மற்றும் நிறுவனங்கள் மசோதா தொடர்பான வரைவு மசோதா கொண்டு வரப்பட்டு, தொழிற்சங்கங்களை கலந்தாலோசித்த பிறகே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போது மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம் அந்த உறுதிமொழியை அரசு மீறிவிட்டது.

    மத்திய அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வுக்கு அதிருப்தி தெரிவித்து, அடுத்த மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பிஎம்எஸ் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். மேலும், வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள தேசியச் செயற்குழுவில், இந்த விவகாரம் தொடர்பாக வேலைநிறுத்தம் செய்வது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

    No comments: