Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, June 22, 2016

    ஒரே அரசுப் பள்ளியில் இருந்து இருவர் மருத்துவ படிப்புக்கு தகுதி - சி.இ.ஓ. பாராட்டு

    ஏலகிரி அரசுப் பள்ளி மாணவர்கள், இருவர் எம்.பி.பி.எஸ்.,ல் சேர தகுதி பெற்றுள்ளனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, ஏலகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த சரத் என்ற மாணவரும், ரம்யா கிருஷ்ணன் என்ற மாணவியும் எம்.பி.பி.எஸ்., சேர தகுதி பெற்றுள்ளனர். 


    மாணவர் சரத், 1,149 மதிப்பெண் பெற்று, மாவட்ட அரசுப் பள்ளி அளவில், முதலிடம் பிடித்திருந்தார். மாணவி ரம்யாகிருஷ்ணன், 1,146 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அரசுப் பள்ளி அளவில், மூன்றாம் இடம் பெற்றிருந்தார். இவர்கள், இருவரும் தற்போது அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

    கிராம பகுதியில் செயல்படும் ஓர் அரசுப் பள்ளியில் இருந்து, இரு மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு தகுதி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த, இருவருக்கும், சி.இ.ஓ., மகேஸ்வரி மற்றும் ஏலகிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தங்கவேல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    2 comments:

    kumaresan said...

    Really great students

    kumaresan said...

    Really great students