Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, March 15, 2016

    7ம் வகுப்பு மாணவன் பலி; சக மாணவன் தள்ளியதால் விபரீதம்

    வகுப்பறையில் சக மாணவன் தள்ளியதில், கீழே விழுந்த மாணவன், சிகிச்சை பலனின்றி இறந்தார்.  விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அடுத்த பூண்டி கிராமத்தை சேர்ந்தவர், அன்பரசு மகன் பாலமுருகன், 12; அம்மையகரத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை, 10:30 மணிக்கு, பள்ளியில் இரண்டாம் பாடவேளை ஆசிரியர் வருவதற்குள், பாலமுருகன், சக மாணவரை மற்றொரு மாணவன் மீது தள்ளி விட்டுள்ளார். 


    ஆத்திரமடைந்த மாணவன், பாலமுருகனின் முகத்தில் தாக்கி, கழுத்தைப் பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில், பாலமுருகனின் பின் மண்டை பெஞ்சில் மோதியதில், மயங்கி விழுந்தார்.

    தகவலறிந்த தலைமை ஆசிரியை கவுசல்யா மற்றும் ஆசிரியர்கள், பாலமுருகனை, சின்ன சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து, மேல் சிகிச்சைக்காக, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பாலமுருகன் இறந்தார். கள்ளக்குறிச்சி கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    No comments: