காலை மற்றும் மதிய உணவு இடைவேளைகளில் மாணவ / மாணவியர்கள் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் மாணவ / மாணவியர்கள் பள்ளி வேலை நேரத்தில் பள்ளி வளாகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது.
பள்ளி இடைவேளை மற்றும் உணவு இடைவேளையின் நேரங்களில் தினந்தோறும் மாணவ / மாணவியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒரு ஆசிரியரை நியமனம் செய்து கண்காணிக்க வேண்டும்.
பள்ளிவளாகத்தில் ஏதேனும் பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் கிணறுகள் இருந்தால் அதனை பற்றி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் தெரிவித்து அதனை மூடுவதற்கும் , அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க இருப்பதற்கும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என அனைத்து மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment