Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 28, 2012

    டி.இ.டி., தேர்வுக்கு மேலும் 4 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்.

    டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்காக அச்சிடப்பட்ட, 8 லட்சம் விண்ணப்பங்களும், மூன்று நாட்களில் விற்றுத் தீர்ந்தன.
    கூடுதலாக அச்சிடப்பட்ட 4 லட்சம் விண்ணப்பங்கள், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களுக்கு இன்று(27.03.12) அனுப்பப்படுகின்றன.
    மாநிலம் முழுவதும் உள்ள 66 மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 22ம் தேதி, விண்ணப்பம் வினியோகம் துவங்கியது. முதல் நாளே 4 லட்சம் விண்ணப்பங்கள் விற்பனை ஆயின. 23, 24, 25 ஆகிய மூன்று நாட்களும் விடுமுறை என்பதால், அடுத்து வந்த 26, 27 ஆகிய நாட்களில் மீதமிருந்த 4 லட்சம் விண்ணப்பங்களும் விற்றுத் தீர்ந்தன.
    தருமபுரி, சேலம், நாமக்கல், வேலூர், கடலூர், திருச்சி, திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு அதிகமான விண்ணப்பங்கள் தேவைப்படுகின்றன. தருமபுரி மாவட்டக்கல்வி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற, நேற்று ஆசிரியர்களும், பட்டதாரிகளும் முட்டி மோதினர். இதனால், போலீசாருக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, ஆசிரியர்களை போலீசார் அடித்து உதைத்தனர். இச்சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிளாக்கில் விற்பனை: இந்த மாவட்டத்தில், பிளாக்கில், அதிக விலைக்கு விண்ணப்பங்கள் விற்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. கல்வித் துறையைச் சார்ந்தவர்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசாருமே, இந்தச் செயலில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. இதேபோல், மற்ற ஏழு மாவட்டங்களிலும், விண்ணப்பங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
    தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் மாவட்டக் கல்வி அலுவலகங்களை முற்றுகையிடுவதால், என்ன செய்வது எனப் புரியாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் முழித்து வருகிறது. இதற்கிடையே, கூடுதலாக அச்சிடப்பட்ட 4 லட்சம் விண்ணப்பங்கள், எட்டு மாவட்டங்களுக்கும் இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. இவை சென்றடைந்தால், தட்டுப்பாடு ஓரளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    கடைசி தேதியை நீட்டிக்க திட்டம்: பல மாவட்டங்களில் விண்ணப்பங்கள் தேவை அதிகமாக இருப்பதாலும், அனைவரும் விண்ணப்பிக்க போதிய அளவிற்கு கால அவகாசம் அளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாலும் ஏப்., 4 என நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதியை, மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இதுகுறித்து தேர்வு வாரிய வட்டாரங்கள் கூறும்போது, "கடைசி தேதியை நீட்டிப்பது குறித்து, ஆலோசித்து வருகிறோம். ஓரிரு நாளில், இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்படும்,'' என்றனர்.
    "டோக்கன்' வழங்க உத்தரவு! வட மாவட்டங்களில், விண்ணப்பங்களை பெற வருபவர்கள், தினமும் ஏமாற்றத்துடன் வீடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க, "டோக்கன்' வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
    விண்ணப்பங்கள் வந்தவுடன், "டோக்கன்' எண்கள் அறிவிக்கப்பட்டு, வரிசையாக விண்ணப்பங்கள் வழங்கப்படும் என, தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த, டோக்கன்களை வாங்கவும், பல மாவட்டங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

    No comments: