Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, March 29, 2012

    ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம் ஏப்ரல் 12ஆம் தேதி வரை நீட்டிப்பு.


    ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து  4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
    பிளஸ்-2 முடித்து டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு நடத்துகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புபவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி காண வேண்டும்.


    இத்தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் பெறுபவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த தகுதித்தேர்வு ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் கடந்த 22ஆம் தேதி முதல் வினியோகம் செய்யப்படுகிறது.  விண்ணப்பிக்க 4ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் தயாராகி வருகிறார்கள். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதியது. முதல் கட்டமாக 4 லட்சம் விண்ணப்ப படிவம் அச்சடித்து வழங்கப்பட்டது. அவை அனைத்தும் ஒரே நாளில் விற்பனையானது. இதையடுத்து விண்ணப்ப விற்பனை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மேலும் 8 லட்சம் விண்ணப்பம் அச்சடித்து வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 16 லட்சம் விண்ணப்பம் அச்சடிக்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள், பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் தொடர்ந்து விண்ணப்பம் வாங்கி செல்வதால் விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்க தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. 4ஆம் தேதி மாலை 5.30 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்பதை மேலும் 8 நாட்கள் நீட்டித்து 12ஆம் தேதி மாலை வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    No comments: