Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, March 26, 2012

    2012 - 13 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவையில் துவங்கியது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை துவங்கினார்.


    பட்ஜெட் விவரம் பின்வருமாறு:
    * புயல் பாதித்த கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் வீடு கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    * புயல் பாதித்த 2 மாவட்டத்தில் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடாக மாற்றவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
    * தமிழ்நாடு கட்டமைப்பு வாரியம் அமைக்க விரைவில் சட்டம் இயற்றப்படும்.
    * நடப்பாண்டில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.3% ஆக உயர்த்தப்படும் .
    * தமிழக பொருளாதார வளர்ச்சியில் சேவைத்துறை வளர்ச்சியே பெரும் பங்கு வகிக்கும்.
    * நகர்ப்புற வறுமையைப் போக்க தமிழக நகர்ப்புற வாழ்வாதார திட்டம் துவக்கம். வாழ்வாதார திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.
    * அரசு மற்றும் பொதுமக்களுக்கு இடையேயான பரிமாற்றங்களில் வெளிப்படை தன்மை.
    * பேரிடர்களை சமாளிக்க சிறப்பு பயிற்சி பெற்ற அமைப்பு உருவாக்கப்படும்.
    * தனியார் துறையுடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டம்.
    * 4340 காவலர் குடியிருப்பு கட்ட ரூ.400 கோடி ஒதுக்கீடு.
    * நடப்பு ஆண்டில் முதன்மைத்துறை 2.36 சதவீதமாகவும் உற்பத்தித்துறை 7.12 சதவீதமாகவும் வளர்ச்சி பெற்றுள்ளது. வரும் ஆண்டில் முதன்மைத்துறை மற்றும் உற்பத்தித்துறை அமைக்க நடவடிக்கை.
    * சாலை பாதுகாப்பிற்காக பட்ஜெட்டில் ரூ.65 கோடி ஒதுக்கீடு.
    * ஓட்டுனர் பயிற்சி பள்ளி அமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு.
    * தீயணைப்பு துறைக்கு ரூ.197.6 கோடி ஒதுக்கீடு.
    * வேளாண்துறைக்கு முன் எப்போதுன் இல்லாத அளவுக்கு ரூ.3.8 கோடி ஒதுக்கீடு.
    * தனியார் துறையுடன் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க திட்டம். மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு.
    * நுண்ணீர் பாசன திட்டத்திற்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு.
    * நெல்லுக்கு ஊக்கத்தொகை ரூ.200 கோடி ஒதுக்கீடு.
    * விவசாய விலைப்பொருள் கிடங்கு அமைக்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.
    * தமிழகம் முழுவதும் உள்ள 49 விரைவு நீதிமன்றங்கள் நிரந்தரமாக்கப்படும்.
    * சென்னையில் வெற்றி அடைந்த இ- சவான் திட்டத்தை 5 மாவட்டங்களில் விரிவாக்க திட்டம்.
    * கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.4000 பயிர் கடன் வழங்கப்படும்.
    * நாட்டுக்கோழி வளர்க்க சிறப்பு திட்டம்.
    * ஆடு,மாடு வழங்க ரூ.244 கோடி ஒதுக்கீடு.
    * விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க திட்டம்.
    * வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்த புதிய மின் ஆளுமை திட்டம்.

    No comments: