தமிழக உயர்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளில், மதுரை காமராஜர், சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலைக்கு துணை வேந்தர்கள் இல்லை.
இவற்றில், மதுரை காமராஜர் பல்கலையில், ஓராண்டுக்கும் மேலாக துணைவேந்தர் இல்லை. அதனால், அங்கு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது. சென்னை பல்கலைக்கு, ஆறு மாதமாக துணைவேந்தர் இல்லை. இங்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, தேர்தலுக்கு முன்பே தேடல்குழு அமைக்கப்பட்டது. ஆனால்,
இதுவரை புதிய துணைவேந்தர் நியமிக்கப்படவில்லை.இந்நிலையில், சென்னை பல்கலை பேராசிரியர்கள் பேரவை பொதுச் செயலர் சுந்தரம் தலைமையில், தலைவர் சம்பத், துணைத் தலைவர்கள்
மணிவாசகம், சீனிவாசன், இணைச் செயலர் சுமதி ஆகியோர் நேற்று, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனை சந்தித்து பேசினர்.
துணைவேந்தர் பதவிக்கு பொருத்தமானவரை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு மனு அளித்தனர். இதேபோல், முதல்வர் அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர்.
No comments:
Post a Comment