Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, March 16, 2016

    ஏழாண்டுக்கு முந்தைய டி.டி.,திருப்பி அனுப்பிய டி.இ.ஓ.,

    தனியார் பள்ளிகள் அளித்த வங்கி வரைவோலையை, ஏழு ஆண்டுகள் கழித்து திருப்பி அனுப்பிய கல்வித்துறை, ரொக்கமாக கட்ட உத்தரவிட்டுள்ளது. சென்னையில், 500க்கும் மேற்பட்ட, அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் ஆசிரியர் நியமனம், அங்கீகாரம் புதுப்பிப்பு, உட்கட்டமைப்பு வசதி ஆய்வு செய்தல், புதிய பாடப்பிரிவுகள் துவங்க அனுமதி போன்ற பல பணிகளுக்கு, மாவட்ட கல்வி அலுவலகங்கள் தான் அதிகார மையங்களாக உள்ளன.
    இந்நிலையில், சென்னை கிழக்கு கல்வி மாவட்டத்தில் வினோதமான முறையில் பண வசூல் நடக்கிறது. அதாவது, 2009ல், அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருந்தும், சில பணிகளுக்கான அனுமதி கட்டணமாக, 500 ரூபாய் முதல், 2,000 ரூபாய் வரை, கல்வித்துறை பெயரில், டி.டி., எனப்படும் வங்கி வரைவோலை பெறப்பட்டது.தற்போது, இந்த டி.டி.,க்கள் அனைத்தும் திடீரென சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு, ஏழு ஆண்டுகளுக்கு பின் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மேலும் இந்த டி.டி.,க்களை வங்கிகளுக்கு சென்று ரத்து செய்து விட்டு, அந்த தொகையை ரொக்கமாக, மாவட்ட கல்வி அலுவலகமான, டி.இ.ஓ., அலுவலகத்தில் வழங்க வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பள்ளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.இதுகுறித்து, பள்ளி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:இந்த டி.டி.,க்கள், ஆறு மாதம் மட்டுமே செல்லத்தக்கது; தற்போது, அவை செல்லாதவை. அலுவலக கணக்குக்கும், இந்த டி.டி.,க்கும் எந்த தொடர்புமில்லை என தெரிகிறது.ஏழு ஆண்டுக்கு முந்தைய டி.டி.,யை, எந்த கணக்கும் காட்டாமல் அப்படியே வைத்திருந்து, அதை பணமாக்க முயற்சிக்கின்றனர். இந்த விஷயத்தில், விசாரணை நடத்த வேண்டும். இல்லையென்றால் தேர்தல் கமிஷனிலும், லஞ்ச ஒழிப்பு போலீசிலும் புகார் அளிப்போம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    No comments: