Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, March 18, 2016

    தனியார் பள்ளியில், மாணவர்கள் தேர்வு எழுத உதவிய ஆசிரியர்கள்: கூண்டோடு இடமாற்றம்

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அங்கு கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் விடைகளை கூறியுள்ளார். இதேபோன்று பிளஸ்–2 வேதியியல் தேர்விலும் சில மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியுள்ளனர். இதுகுறித்து சென்னையில் உள்ள தேர்வுத்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிந்தது.

    அதன் பேரில் தேர்வுத்துறை இணை இயக்குநர் சசிரேகா, ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதன் அடிப்படையில் அந்த தனியார் பள்ளியில் தேர்வு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரும் கூண்டோடு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி ஜெயக்கண்ணு கூறியதாவது:–

    பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு தேர்வு எழுத சில ஆசிரியர்கள் உதவி வருவதாக எனக்கு புகார் கடிதம் வந்தது. இதேபோன்று உயர் அதிகாரிகளுக்கும் புகார் கடிதம் சென்றுள்ளது.

    அவர்களது உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக இட மாற்றம் செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    No comments: