Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, March 18, 2016

    தொடக்க கல்வி அலுவலகத்தில் பள்ளி ஆசிரியர்கள் முற்றுகை

    ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேறாததால் வேடசந்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஊதிய முரண்பாடுகளை களைய கோரியும், கோவிலூர் பள்ளி ஆசிரியர் செந்தில்குமாரின் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்த கோரியும், மாவட்ட அளவிலான காத்திருப்பு போராட்டம் மார்ச் 9ல் திண்டுக்கல்லில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    மாவட்ட கல்வி அதிகாரி வேடசந்தூர் தொடக்க கல்வி அலுவலகத்தின் மூலம் பள்ளி ஆசிரியர் பிரச்னையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என கூறியதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
    இதன்பின், உதவி துவக்க கல்வி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரச்னையை தீர்க்க கோரினர்.
    மாவட்ட அதிகாரியிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என உதவி கல்வி அலுவலகத்தில் தெரிவித்தனர். இதனால் நேற்று மாலை அங்கு ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். இரவு 8 மணி வரை அலுவலர்கள் வெளியே வரஇயலவில்லை.
    இதில் போராட்டத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், செயலாளர் அமல்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன், வேடசந்தூர் வட்டார தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    No comments: