Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 4, 2016

    அண்ணா பல்கலை அறிவிப்பு தற்காலிக பணியாளர்கள் பீதி

    அண்ணா பல்கலையில், ஒரே மாதத்தில், 130 காலியிடங்களை நிரப்ப, 10 அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதனால், தற்காலிக பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற நிலையில், அரசின் பல துறைகளில், காலியிடங்களை நிரப்பும் பணி அவசர கதியில் நடக்கிறது. அண்ணா பல்கலையில், 130 காலியிடங்களை நிரப்ப, ஜனவரியில் மட்டும், 10 அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. குறுகிய கால இடைவெளியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆட்களை தேர்வு செய்யும் பணி, தினமும் நடக்கிறது.


    இதேபோல, உதவி பேராசிரியர்களை தேர்வு செய்யும் பணியும், அவசர கதியில் நடக்கிறது. பல்கலையின் கீழ் உள்ள அரசு கல்லுாரிகளில், இளநிலை உதவியாளர்கள், 45 பேர்; அலுவலக உதவியாளர்கள், 75 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த அறிவிப்பு, ஜன., 13ல் வெளியாகி, ஜன., 29 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அலுவலக உதவியாளருக்கு, 8ம் வகுப்பு; இளநிலை உதவியாளருக்கு பட்டப்படிப்பு, கல்வி த்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதவியை பெற, ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். பலர், அரசியல்வாதிகள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம், அண்ணா பல்கலையை அணுகியுள்ளனர்.
    இதேபோல், அண்ணா பல்கலையின், 10 துறைகளில், 13 ஆய்வு உதவி அலுவலர் பணிக்கும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன், அண்ணா பல்கலை மற்றும் மண்டல அலுவலகங்கள் மூலம், இன்ஜி., கல்லுாரிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட, 300 அலுவலக உதவியாளர்கள் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தற்போது, புதிய ஆட்களை நியமிப்பதால், தங்கள் கதி என்ன ஆகுமோ என, தற்காலிக பணியாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    No comments: