Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, February 17, 2016

    7,000 மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத விலக்கு!

    தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் சிறுபான்மை மொழி மாணவ, மாணவியருக்கு, தமிழ் பாட தேர்வில் இருந்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் விலக்கு அளித்துள்ளது.


    தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் சட்டத்தை கடந்த, 2006 ஜூன், 12ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தால், நடப்பாண்டு எஸ்.எஸ்.எல்.சி., படித்து வரும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது மொழி மாணவ, மாணவியர், தமிழ் மொழி தேர்வு கட்டாயம் எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 

    அத்துடன் தங்களது தாய்மொழியை படிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். சிறுபான்மை மொழி மாணவ, மாணவியரை அவர்களது தாய் மொழியில் பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தங்களது தாய் மொழியில் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து, பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் கொடுத்த, 7,000 மாணவ, மாணவியரை, அவர்களது தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதி அளித்தது. இந்த உத்தரவை பள்ளிக்கல்வித்துறை அமல்படுத்தவில்லை.


    இதை கண்டித்து, சிறுபான்மை மொழிகளின் கூட்டமைப்பு சார்பில், நாளை (பிப். 18) சென்னையில் போராட்டம் நடத்துவது என, கடந்த, 14ம் தேதி, ஓசூர் ஆந்திரசமிதியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதும் சிறுபான்மை மொழி மாணவ, மாணவியருக்கு தமிழ் தேர்வு எழுத விலக்கு அளிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, மார்ச், 7ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

    இந்நிலையில், அரசு தேர்வுத்துறை இயக்குனரகம், ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது போல், பள்ளிக்கல்வித்துறையிடம், தங்களது தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த சிறுபான்மை மொழி மாணவ, மாணவியருக்கு, தமிழ் தேர்வு எழுத விலக்கு அளித்துள்ளது. இதற்கான உத்தரவு ஆணை நேற்று கிடைக்க பெற்றது. இதை சிறுபான்மையின கூட்டமைப்பினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர்.

    No comments: