Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 18, 2016

    அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது

    புதுக்கோட்டையில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக சாலையில் அமர்ந்து  ஒப்பாரி வைத்து  நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், சத்துணவு ஊழியர்கள்  உள்ளிட்ட 937 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.


    தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் கடந்த 10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்ததுடன் தினமும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் செவ்வாய்க்கிழமை சட்டப்பேரவையில் தொடங்கிய தமிழக அரசின இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் தங்களது கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால்,  தமிழக முதல்வர்  எந்த வித அறிவிப்பையும்  வெளியிடாததால் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்துள்ள அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை பல்வேறு வழிகளில் தீவிரப்படுத்திவருகின்றனர்.

    இந்நிலையில்,  அரசு ஊழியர்கள் சங்கங்களின் போராட்டக்களத்தின் 8 -ஆவது நாளான புதன்கிழமை புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்கு, போராட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கி.நாகாரஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் வி. திருப்பதி ஆகியோர் தலைமை வகித்தனர். அரசு ஊழியர்சங்க  மாவட்ட நிர்வாகிகள் க. ஜெயபாலன், சி. கோவிந்தசாமி,  தமிழ்ச்செல்வி, கருப்பையா, பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வருவாய்த்துறை அலுவலர்சங்க மாநில துணைத் தலைவர் எஸ்.நாகராஜன், அங்கன்வாடி பணியாளர் சங்க நிர்வாகி இந்திராணி, சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி காமராஜ் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்திப் பேசினர். இதையடுத்து சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து  ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுப்பட்ட பெண்கள் 692 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 937 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

    No comments: