Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, February 26, 2016

    அரசுப் பள்ளியின் சம்பளப் பட்டியலில் திருத்தம் செய்து ரூ.15 லட்சம் மோசடி: இளநிலை உதவியாளர் தாற்காலிகப் பணி நீக்கம்

    ஆரணி அருகே அரசுப் பள்ளியின் சம்பளப் பட்டியலில் மாதந்தோறும் திருத்தங்கள் செய்து, ரூ.15 லட்சம் வரை மோசடியாகப் பெற்ற இளநிலை உதவியாளரை தாற்காலிகப் பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவிட்டுள்ளார்.


    ஆரணியை அடுத்த களம்பூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் இளநிலை உதவியாளராக கண்ணன் என்பவர் பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறது. இவர், ஒவ்வொரு மாதமும் சம்பளப் பட்டியலில் திருத்தங்கள் செய்து முறைகேடான வகையில் கூடுதல் சம்பளம் பெற்று வருவதாக கல்வித் துறை அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றன.

    இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் களம்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, இளநிலை உதவியாளர் கண்ணன், தனது சம்பளப் பட்டியலில் திருத்தங்கள் செய்து முறைகேடாக ஒவ்வொரு மாதமும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கூடுதல் சம்பளம் பெற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறாக 2011 முதல் 2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை சுமார் ரூ.15 லட்சம் வரை கண்ணன் கூடுதல் சம்பளம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, அவரை தாற்காலிகப் பணி நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவிட்டார். இத்தனை ஆண்டுகளாக நடைபெற்ற மோசடியை பள்ளித் தலைமை ஆசிரியர் எப்படி கண்காணிக்கத் தவறினார் என்பது குறித்தும் கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    No comments: