Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, February 25, 2016

    தனியார் பள்ளிகளில் பகுதிநேர பணி; சி.இ.ஓ., எச்சரிக்கை

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், வேறு தனியார் பள்ளிகளில் பகுதி நேர பணியில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை: 


    அரசு பள்ளி ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் வகுப்பெடுக்க செல்லக்கூடாது என, அனைவருக்கும் கட்டாயக்கல்விச்சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளராக பணிபுரிந்து, அரசு ஊதியம் பெற்றுவரும் நிலையில், தனியார் பள்ளிகளில் பகுதிநேரமாக பணிபுரிவது, அரசு பணியாளர் நடத்தை விதிகளை மீறிய செயல். 
    எனவே, சேலம் மாவட்டத்தில் அரசு, நகரவை, நிதியுதவி பெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள்,ஆசிரியர்கள் ஆகியோர் தனியார் பள்ளிகளில் பணிபுரிவதாக கண்டறியப்பட்டால், அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    No comments: