Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 22, 2016

    பொதுத் தேர்வு: மாணவர்களின் நலனுக்காக தடையில்லா மின்சாரம்

    10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வையொட்டி, தடையில்லா மின்சாரம் வழங்க மின் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் கோவிந்தராஜு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


    கிருஷ்ணகிரி கோட்டத்தில் முன்பருவ கால பராமரிப்பு, 12 மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை கவனத்தில் கொண்டு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 22-ஆம் தேதி மணவரானப்பள்ளி, கங்கோஜிகொத்தூர், எட்ரப்பள்ளி, ஆவல்நத்தம், கே.என்.பள்ளி,
    சின்னகொத்தூர், நாச்சிகுப்பம், உலகம், உல்லட்டி, ஏனுசோனை, ஒசள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 8 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். பிப்.23-ஆம் தேதி கெட்டூர், கீழ்மொரசிபட்டி, மேல்மொரசிப்பட்டி, அஞ்சாலம், ராமாபுரம், ஆலமரத்துப்பட்டி, பதிமடுகு, தீர்த்தம், நல்லூர் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், 24-ஆம் தேதி குப்பச்சிப்பறை, மாரசந்திரம், குருபரப்பள்ளி, காளிங்காவரம், கோடிப்பள்ளி, சூலாமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    வரும் 25-ஆம் தேதி காளிங்காவரம், பஸ்தலப்பள்ளி, செம்பரசனப்பள்ளி, சிம்பல்திராடி, வேப்பனஅள்ளி, பூதிமுட்லு, கே.கொத்தூர், கொங்கனப்பள்ளி, சிகரமானப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், 26, 27 ஆகிய தேதிகளில் பி.ஏ.துர்கம், சாமல்பள்ளம், பீர்பள்ளி, மேலுமலை, மல்லசந்திரம், பிக்கனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும், 29-ஆம் தேதி சூளகிரி, வேம்பள்ளி, போரிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: