Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, February 12, 2016

    ஊரகவேலைவாய்ப்பு வேலை திட்டம் நிறுத்தம்:அரசு ஊழியர்கள் போராட்டத்தால்

    அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக, நூறு நாள் வேலை திட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதனால், ஏராளமான குக்கிராம மக்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட 33 சங்கங்கள் இணைந்து, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், "சிறப்பு காலமுறை' ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு, "காலமுறை' ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி கிடக்கின்றன. பொது மக்கள், அரசு சார்ந்த எந்த பணிகளையும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.


    இந்நிலையில், மத்திய அரசின் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளில், குறைந்தது 200 பேர் முதல் ஆயிரம் பேர் வரை, பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். கண்மாய், குளங்களில் தூர் வாருதல், கரையை பலப்படுத்துதல் மற்றும் ரோடு பணிகள் என ஈடுபட்டனர்.

    இவர்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.150 முதல் 160 வரை அரசு வழங்கி வந்தது. தற்போது, அரசு ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தத்ததால், நூறு நாள் வேலை திட்டம் பிப்., 10-ந் தேதி முதல் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற மக்கள் வேலை வாய்ப்பு இன்றி வீட்டில் முடங்கி கிடக்கின்றனர்.

    அரசு ஊழியர்களின் போராட்டம் காரணமாக, ஆங்காங்கே உள்ள ஊராட்சி தலைவர்கள், ஆளும் கட்சி நிர்வாகிகள் சார்பாக சுய உதவிக்குழு பெண்களை பிடித்து, பள்ளிகளில் சத்துணவு சமைத்து, மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர். இதே நிலை நீடித்தால், அரசு இயந்திரம் முழுவதுமாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    No comments: