Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, June 7, 2016

    பார்வையாளர்கள் அறிக்கை:தேர்தல் கமிஷன் அதிர்ச்சி

    தமிழக சட்டசபை தேர்தலின்போது, பார்வையாளர்களாக பணியாற்றிய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அளித்த அறிக்கை, தேர்தல் கமிஷனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபை தேர்தல், மே 16ம் தேதி நடந்தது. தேர்தல் கமிஷன் சார்பில், தேர்தல் பார்வையாளர்களாக, 118 பொதுப் பார்வையாளர்கள், 32 போலீஸ் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.


    தேர்தலில், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், தேர்தல் நேர்மையாக, அமைதியாக நடைபெறவும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

    தேர்தல் முடிந்த பின், பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில், தேர்தல் எவ்வாறு நடந்தது? என, தலைமை தேர்தல் கமிஷனருக்கு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில், எந்த கட்சி சார்பில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது, ஒவ்வொரு பகுதியிலும், எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது. பணம் பட்டுவாடா எவ்வாறு நடந்தது; பணம் மட்டுமின்றி, வேறு என்னென்ன பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன

    பணம் பட்டுவாடாவிற்கு போலீசார் மற்றும் மாநில அதிகாரிகள் எவ்வளவு ஒத்துழைப்பு வழங்கினர் போன்ற விவரங்களை குறிப்பிட்டு உள்ளனர்.சில தொகுதிகளில், ஓட்டுக்கு, 1,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ள விவரத்தையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளர்கள் அளித்த அறிக்கை, தேர்தல் கமிஷனில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் பார்வையாளர்கள் அளித்த அறிக்கையை தொகுத்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தவறுகளை, வருங்காலத்தில் தடுப்பது குறித்து, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது

    No comments: