Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 9, 2016

    ஆங்கில வழி கல்வி மோகம் மாறும் : பள்ளி தாளாளர் பேச்சு

    தமிழ்வழி கல்வி பள்ளியில்  மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும் .ஆங்கில வழி கல்வி மோகம் மாறும்

    பள்ளி தாளாளர் பேச்சு

    தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஆளுமை பயிற்சி முகாமில் திருச்சி மாவட்டம் இறகுடி   அகோமு (AGM) அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர்  மனோகரன் தமிழ்வழி கல்வி பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை விரைவில் அதிகமாகும். ஆங்கில வழி கல்வி மோகம் மாறும் என்று பேசினார்.


    முகாமிற்கு வந்தவர்களை ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் . தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி முதல்வர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.திருச்சி மாவட்டம் இறகுடி  அகோமு (AGM)      அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மனோகரன் பேசுகையில்,”நாம் வாழ்வில் லட்சியத்தை நிர்ணயம் செய்வோம்.அன்பை ஆயுதமாக எடுத்துக் கொள்வோம்.உண்மையை பாதையாக அமைத்துக் கொள்வோம்.தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியோடு போராடுவோம் .வரும் கால சந்தததிக்கு வழிகாட்டியாக திகழ்வோம்” என மாணவர்களிடம் பொய் சொல்லுதல் கூடாது,தன்னம்பிக்கையுடன் வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும்,இலக்கு நிர்ணயித்து கொள்ள வேண்டும் .இலக்கை அடையாவிட்டாலும் அடுத்த இலக்கு அமைத்து அதனை அடைய  தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும்.பல்வேறு கதைகளின் வழியாக மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வண்ணம் இதனை விளக்கி கூறினார்.மேலும் ஆசிரியர்கள் அனைவரும் இன்றைய சூழ்நிலையில் மாணவர்களிடம் மற்றும் அவர்கள் பெற்றோர்களிடமும் அன்பாக இருக்க வேண்டும்.ஒரு நிமிட இலக்கை அடைவது எவ்வாறு ,நாம் நம்மை இன்றைய வாழ்க்கை முறையோடு எவ்வாறு இணைத்து கொண்டு சமுதாயத்துக்கு உதவும் வகையில் ,சமுதாய முன்னேற்றம் அடையும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு போதிப்பது என்பதை பல்வேறு நடைமுறை நிகழ்வுகளோடு விளக்கி கூறினார்.ஆங்கில வழி கல்வி என்பது மோகம்தான் .விரைவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தமிழ் வழி கல்வி பள்ளிகளை நோக்கி மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக வந்து சேரும்.இவ்வாறு பேசினார்.மாணவிகள் பரமேஸ்வரி,ராஜேஸ்வரி,கார்த்திகா,தனலெட்சுமி,முத்தழகி,விஜய்,செந்தில்குமார்,

    பிரவீனா,சங்கீதா ,ஸ்ருதி ,ஜெனிபர்,பார்கவி லலிதா ,மாணவர்கள் ஜெகதீஸ்வரன்,சாய் புவனேஸ்வரன்,ஜீவா,பரத்குமார் உட்பட பலர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.முகாம் நிறைவாக ஆசிரியை கலாவல்லி நன்றி கூறினார்.

    No comments: