Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 16, 2016

    சத்துணவு மையங்களில் வழங்க 950 டன் பயறு வகைகள் கொள்முதல்

    சத்துணவு மையங்களில் வழங்க, 950 டன் பயறு வகைகள் வாங்க, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில், மாணவர்களுக்கு, வேக வைத்த கருப்பு கொண்டை கடலை, பச்சை பயறு வகைகள், ஒருவருக்கு தலா, 20 கிராம் வழங்கப்படுகிறது. இவற்றை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து, சத்துணவு மையங்களுக்கு சப்ளை செய்கிறது.


    தற்போது, கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் துவங்கி உள்ளன. இதையடுத்து, 600 டன்கருப்பு கொண்டை கடலை; 350 டன் பச்சை பயறு வாங்கப்பட உள்ளது. இதன்மதிப்பு, ஐந்து கோடி ரூபாய். இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சத்துணவு மையங்களில் வழங்கப்படும் பயறு வகைகள், தரமற்று இருப்பதாக புகார்கள் வருகின்றன. இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு, உயரதிகாரிகளிடம் அறிவுறுத்தியும், அலட்சியமாக உள்ளனர்' என்றார். 

    No comments: