Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, June 9, 2016

    சிவகங்கை மாவட்டத்தில் 40 போலி நர்சிங் கல்லூரிகள்

    சிவகங்கை மாவட்டத்தில் 40 போலி நர்சிங் கல்லுாரிகள் செயல்படுவது தெரிய வந்துள்ளது.மருத்துவத்துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. இதனால் மருத்துவம் சார்ந்த படிப்புகளில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனை பயன்படுத்தி சிலர் அரசு அங்கீகாரம் பெறாமல் நர்சிங், லேப் டெக்னீசியன் போன்ற பயிற்சிகளை அளித்து வருகின்றனர். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மாணவிகள் சேர்க்கையை நடத்தி ஒவ்வொருவரிடமும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வசூலிக்கின்றனர்.

    சமீபகாலமாக கிராமங்களில் கூட நர்சிங் கல்லுாரி நடத்துகின்றனர். நேற்று திருப்புவனம் வர்த்தகர் சங்க கட்டிடத்தில் இயங்கிய அன்னை நர்சிங் கல்லுாரியை வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன், மருத்துவ இணை இயக்குனர் விஜயன் மதமடக்கி, சுகாதார துணை இயக்குனர்செந்தில், தாசில்தார் கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் சேசு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அந்த கல்லுாரி 2012 முதல் அனுமதி பெறாமல் நர்சிங் பயிற்சி நடத்தியது தெரியவந்தது. இதயடுத்து கல்லுாரி உரிமையாளர் காளிமுத்துவை அதிகாரிகள் எச்சரித்தனர்.

    மருத்துவ இணை இயக்குனர் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 40 போலி நர்சிங் கல்லுாரிகள் உள்ளன. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆய்வு நடத்துகிறோம். 20 நாட்களில் அனுமதி பெறாத அனைத்து கல்லுாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் ஒருசில கல்லுாரிகள் மட்டும் அனுமதி பெற்றுள்ளன, என்றார்.

    No comments: