Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, February 15, 2016

    தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல்

    தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
    தமிழக சட்டப்பேரவைக்கு மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதால் தற்போது முழுமையான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய இயலாது. எனவே அரசு செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும், ஏற்கனவே அறிவித்த திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவும் இடைக்கால நிதிநிலை தாக்கல் செய்யப்படும்.
    நாளை பகல் 11 மணிக்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார். தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதிருப்பதால் சில முக்கிய அறிவிப்புகளை இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அதிமுக அரசு அறிவிக்கும் என்று அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
    இந்த கூட்டத்தொடர் எத்தனை நாட்களுக்கு நடைபெறும் என்று நாளை காலை சபாநாயகர் தலைமையில் நடக்கும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
    சட்டப்பேரவை கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டதால் அனைத்து தேமுதிக எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
    சட்டப்பேரவை கூட்டத்தில் மதுவிலக்கு, அரசு ஊழியர் போராட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திமுகவும், தேமுதிகவும் திட்டமிட்டுள்ளன. மது விலக்கை அறிவிக்க இரு கட்சிகளும் இந்த கூட்டத்தொடரில் வலியுறுத்தக்கூடும். அரசு ஊழியர்களை சமரசம் செய்யும் வகையில் நிதிநிலை அறிக்கையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.
    எனவே, அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டம் நீடிக்குமா என்பது நாளை தாக்கலாகும் இடைக்கால நிதிநிலை அறிக்கையை பொருத்தே அமையும் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    No comments: