Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, February 16, 2016

    "ஆசிரியர் சங்க கூட்டமைப்பு அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் திருப்தி"

    தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டேக்டோ) சார்பில் அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை திருப்திகரமாக அமைந்தது என அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பா.ஆரோக்கியதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஆசிரியர் சங்க கூட்டு இயக்கங்களுடன் (டேக்டோ, ஜாக்டோ) அரசு சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் கருத்தைக் கேட்டு ஆலோசனை நடத்தினர். பேச்சுவார்த்தையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துதல், 2003-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவித்தல், தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 10 சதவிகிதம் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

    இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச்சென்று நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதியளித்தனர். அதன்படி டேக்டோவின் கோரிக்கைகளை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதாவும் உத்தரவிட்டுள்ளார்.

    இடைக்கால பட்ஜெட்டிலும் டேக்டோ அமைப்பின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வகையில் அறிவிப்பு இடம் பெறும் என நம்புகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    No comments: