Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 22, 2014

    பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித தர பட்டியலை இணையத்தில் வெளியிட அண்ணா பல்கலைக்கு ஐகோர்ட் உத்தரவு

    பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகித தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பூபால்சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தமிழகம் முழுவதும் 500க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்காக பெரும்பாலான கல்லூரிகள் விளம்பரம் வெளியிட்டு வருகின்றன. இதில் எந்த கல்லூரியில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது என்று கண்டுபிடிக்க முடியாமல் மாணவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

    எனவே, ஒவ்வொரு கல்லூரியும் தங்களது கல்லூரியில் கடந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் மற்றும் கல்லூரிகளில் என்னென்ன அடிப்படை வசதிகள் உள்ளன என்று ரேங்க் பட்டியல் தயாரித்து, அந்த பட்டியல் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் விளம்பரம் வெளியிட உத்தரவிடவேண்டும். அண்ணா பல்கலை இணைய தளத்திலும் வெளியிட வேண்டும்.மேலும் ஒரே பெயரில் பல கல்லூரிகள் செயல்படுவதை தடுக்கவேண்டும். அதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை தற்காலிக தலைமை நீதிபதி அக்னி கோத்ரி, நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் கடந்த மாதம் விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். அதன்படி இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பு:
    1. தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தை தயாரிக்க வேண்டும். ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் இணைய தளத்தில் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை வெளியிட்டது. அதுபோல கடந்த ஆண்டின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிடவேண்டும். 
    2. இந்த கல்லூரிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகித பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் தயார் செய்து அதை விளம்பரம் செய்ய வேண்டும். 
    3. ஒரே பெயரில் பல கல்லூரிகள் நடத்தப்பட்டு இருந்தால் அதை கண்டுபிடித்து அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில், கிரிமினல் மற்றும் சிவில் நடவடிக்கை எடுக்கவேண்டும். 
    4. அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், இதர பொறியியல் கல்லூரிகளை தவறாமல் அவ்வப்போது ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் உள்ளதா என்று அண்ணா பல்கலை, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிக்கை தயார் செய்து உரிய உத்தரவுகளை பிறப்பிக்கவேண்டும். 
    5. பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கவுன்சில் தொடங்குவதற்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை தயார் செய்து அதை இணைய தளத்தில் வெளியிட வேண்டும். அண்ணா பல்கலைக்கழக இணையதளத்திலும், 2 வாரத்துக்குள் வெளியிட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.

    No comments: