Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 22, 2014

    ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவருக்கு பள்ளியில் வேலைவாய்ப்பு பதிய 4ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடு

    ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் தாங்கள் படித்த பள்ளிலேயே, வரும், 4ம் தேதி வரை, வேலைவாய்ப்பை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது' என, தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர் கலைச்செல்வன் தெரிவித்தார்.

    தஞ்சை மாவட்டத்தில், ப்ளஸ் 2 மாணவ, மாணவியருக்கு மார்க் ஷீட் வழங்கும் பணி நேற்று முதல் துவங்கியது. தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் (பொ) ஜெயராஜ் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு மார்க் ஷீட்களை வழங்கி, பணியை நேற்று துவக்கி வைத்தனர்.
    இதையடுத்து, ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு வேலைவாய்ப்பு பதிவை எளிமையாக மேற்கொள்ள சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்புத்துறை அலுவலர் கலைச்செல்வன் கூறியதாவது: ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள விரும்பும் மாணவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வர தேவையில்லை. தாங்கள் படித்த பள்ளிக்கு, மார்க் பட்டியல் பெற செல்லும்போது, தங்களது ரேஷன்கார்டு ஒரிஜினல் மற்றும் ஜெராக்ஸ் நகலுடன் சென்று, தங்களது வேலைவாய்ப்பு பதிவை அந்தந்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு அட்டையையும் அதே பள்ளியில் மாணவ, மாணவியர் பெற்று கொள்ளலாம்.
    பள்ளி இறுதி வகுப்பு தேர்ச்சியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கனவே பதிவு செய்து, நடப்பு கல்வியாண்டில் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் மார்க் பட்டியல் பெற தங்களது பள்ளிக்கு செல்லும்போது ஆன்லைனில் வேலைவாய்ப்பை பதிந்து, அடையாள அட்டை பெற்று கொள்ளலாம்.
    இத்தகைய வசதி மார்க் ஷீட் வழங்கும் துவக்க நாளான, 21ம் தேதி முதல் ஜூன், 4ம் தேதி வரை செய்யப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் எப்போது பதிவு செய்தாலும், 21ம் தேதி தான் பதிவு மூப்பாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். தமிழகத்திலுள்ள எந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பதிவையும் தாங்கள் படித்த பள்ளியிலேயே மேற்கொள்ளலாம். எனவே, அருகிலுள்ள மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியர்களும் தாங்கள் படித்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ள முடியும். இதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அதேசமயத்தில், மேல்நிலைக்கல்வியில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் பதிவுகள் மேற்கொள்ள இயலாது. இவ்வாறு, அவர் கூறினார்.

    No comments: