Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 24, 2014

    887 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி

    எஸ்எஸ்எல்சி தேர்வில் 887 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 
    பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் சாதனை புரிந்து வருகின்றன. இந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் 887 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு 482 அரசுப் பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி அடைந்திருந்தன. 

    அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் 88,840 பேர் 400-க்கு மேலும், 24 ஆயிரம் பேர் 450-க்கு மேலும், 2,039 பேர் 480-க்கு மேலும், 239 பேர் 490-க்கு மேலும் மதிப்பெண் பெற்று சாதனை புரிந்துள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். 
    எஸ்எஸ்எல்சி தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்த 19 பேரில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பத்தமடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி டி.என்.பாஹீரா பானுவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் சராசரியாக 85.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    No comments: