Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, May 6, 2014

    நிகர்நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்க! உச்சநீதிமன்றம் உத்தரவு

    நாடு முழுவதும் 44 நிகர் நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட நிகர்நிலைப் பல் கலைக்கழகங்கள் உள்ளன.நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் பலவற்றில் தரமற்ற கல்வி

    வழங்கப்பட்டு வருவதாக கூறி, உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2006–ம் ஆண்டு பொது நல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட் டது.இதையடுத்து நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், பி.என். தாண்டன் குழு மூலம் மத்திய அரசு ஆய்வுகளை மேற்கொண் டது. அப்போது 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமலும், அதிக கட்டணம் வசூலித்து தரமற்ற கல்வியை வழங்குவதாகவும் கண்டறியப்பட்டது.


    இதன் அடிப்படையில் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங் களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத் தப்பட்டது. இதை எதிர்த்து நிகர்நிலை பல்கலைக்கழகங் கள் மேல்முறையீடு செய்தன.இந்நிலையில், 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் தரம், உள்கட்டமைப்பு ஆகியன வற்றை ஆய்வு செய்து வரும் ஜூலை 30-க்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.44 நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் தமிழகத்தில் மட்டும் 17 நிகர்நிலை பல் கலைக்கழகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    No comments: