Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, May 14, 2014

    குறைவான தேர்ச்சி சதவீதம்: தலைமை ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கத்திற்கு கடும் கண்டனம்

    தமிழ்நாடு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநில தலைவர் எத்திராஜூலு நேற்று வெளியிட்ட அறிக்கை: மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் கூட்டு முயற்சி
    மற்றும் கடின உழைப்பால் பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஆனால், 60 சதவீதத்துக்கும் குறைவான தேர்ச்சி வீதம் வந்துள்ள மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சுமார் 30 சதவீதம் வரை ஆசிரியர் பணியிடங்கள், 60 சதவீதம் ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் காலியாக உள்ள நிலையில், எஞ்சியுள்ள ஆசிரியர்களை வைத்தே அரசின் 14 வகை நலத் திட்டப் பணிகள் பள்ளி வேலை நாட்களில் நிறைவேற்றப்படுகின்றன.

    அதுமட்டும் அல்லாமல் டிஎன்பிசி, டிஆர்பி, டிடிஎட் தேர்வுகள், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் கணக்கெடுப்பு பணி, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.இவற்றை கணக்கில் கொள்ளாமல் தலைமை ஆசிரியர்களை மட்டுமே பொறுப்பாக்குவது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இருந்தும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது. எனவே அந்த உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு எத்திராஜூலு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    1 comment:

    OKKODAI.IN said...

    அரசு போக்குவரத்து பஸ் ஒட்டும் அரசு ஊழியர்கள் அனைவரும் பஸ்ஸை கவிழ்க்க வேண்டும் என நினைத்து ஓட்டுவது இல்லை .அதுபோல் தான் ஆசிரியரும் . ஆசிரியரை நீங்கள் (உயர் அதிகாரிகள் ) மதிக்க வில்லை எனில் மாணவன் எவ்வாறு மதிப்பான்? . கலாம் ஆசிரியரை மதித்தார் . இவர் (உயர் அதிகாரிகள் ) ஆசிரியரை மிதித்தார் . காரணம் என்ன? படித்தவன் நாட்டை ஆளவேண்டும்.