Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 19, 2014

    ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் விண்ணப்பம் பெறாததால் தயக்கம்

    தமிழகத்தில், ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங்கிற்கு, இதுவரை விருப்பம் கோரி விண்ணப்பம் பெறாமல் இருப்பதால், ஆசிரியர்கள் தயக்கம் அடைந்துள்ளனர். தொடக்க, நடுநிலை, உயர்,மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கிற்கு, ஆசிரியர்களிடம் ஏப்ரலில் விருப்ப மனு பெற்று, மே- மாதத்தில் அந்தந்த சி.இ.ஓ.,க்கள் முன்னிலையில், கவுன்சிலிங் நடத்தப்படும்.

    கடந்த கல்வி ஆண்டு முதல், "ஆன்-லைனில்' விண்ணப்பங்களை பதிவு செய்து, மே- மாதத்தில், ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்தி, டிரான்ஸ்பர் வழங்கப்பட்டது. இதனால், பள்ளி துவங்கும் ஜூன் மாதத்தில், ஆசிரியர்கள் அவர்கள் மாறுதல் பெற்று சென்ற பள்ளியில், சேர்ந்து பணியை துவக்கினர்.
    தற்போது, தேர்தல் நடத்தை விதிகளை காரணமாக கூறி, டிரான்ஸ்பர் கவுன்சிலிங்கிற்கு, இது வரை ஆசிரியர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. மேலும், இனிவரும் காலங்களில், கவுன்சிலிங்கிற்கான விண்ணப்பத்தை பெற்று, ஆசிரியர்கள் டிரான்ஸ்பர் பெற்று சென்றால், பள்ளிகள் துவங்கும் நேரத்தில், ஆசிரியர்கள் மாறுதலாகி செல்லும் சூழல் ஏற்படும். இதனால், கல்வி ஆண்டு துவக்கத்திலேயே, மாணவர்களின் சேர்க்கை, வகுப்புகள் நடத்துதல் போன்ற பணிகள் பாதிக்கப்படும்.
    இது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "மே இறுதியில், கல்வித்துறை விரைந்து, டிரான்ஸ்பர் கவுன்சிலிங் நடத்தினால், ஆசிரியர்களின் குழந்தைகளை வேறு பள்ளிகளுக்கு மாறுதல் பெற்று, சேர்க்க முடியும். ஒவ்வொரு ஆண்டும், நகர்புறங்களை ஒட்டியுள்ள பள்ளிகளின் ஆசிரியர் காலியிடங்கள் மறைக்கப்பட்டே, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதை தவிர்த்து, வெளிப்படையான கவுன்சிலிங்கை, தமிழக அரசு நடத்தவேண்டும், என்றார்.

    No comments: