Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 16, 2014

    ஆசிரியர்களின் கவனக் குறைவால் 3ம் வகுப்பு மாணவன் இறப்பு

    ஆசிரியர்களின் கவனக் குறைவால் பள்ளி அருகே உள்ள குட்டையில் விழுந்து இறந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    செங்கல்பட்டு தாலுக்காவில் உள்ள கருநிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.வீரராகவன். இவரது மகன் பிரசாந்த் (8) அங்கு உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான்.

    கடந்த 2009-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 25-ஆம் தேதி பள்ளிக்குச் சென்ற பிரசாந்த் வீடு திரும்பவில்லை. பள்ளியில் சென்று ஆசிரியர்களிடம் கேட்ட போது அவர்களுக்கும் தெரியவில்லை. அவனுடன் இருந்த மற்ற மாணவர்களை விசாரித்தபோது, பகல் 12 மணி வரை வகுப்பறையில்தான் இருந்தான் எனத் தெரிவித்துள்ளனர். அவர்கள் அதன் பிறகு பிரசாந்த்தை பார்க்கவில்லை.

    ஆனால், வகுப்பறையில் பிரசாந்த்தின் பை இருந்தது. அவனுடைய கால்சட்டை பள்ளியிலிருந்து 25 அடி தூரத்தில் உள்ள குட்டையின் அருகே கிடந்தது. அந்தக் குளம் 22 அடி ஆழம் கொண்டது.

    பிரசாந்த் ஒருவேளை குட்டையில் விழுந்திருப்பானோ என்ற நோக்கத்தில் குட்டையில் தேடும்போது, பிரசாந்த் மற்றும் விக்னேஷ் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

    பிரசாந்த் வகுப்பாசிரியர் விடுமுறையில் இருந்ததால், அந்த வகுப்பு பொறுப்பாளராக மற்றொரு ஆசிரியர் நியமிக்கப்பட்டிருந்தார்.

    அவரும் வகுப்பறையில் இல்லை. அவர்களின் கவனக்குறைவால்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

    அதனால், ஆசிரியர்களின் குறைபாடு காரணமாக எனது மகன் இறந்துள்ளான். எனவே, எனது மகன் இறப்புக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி பிரசாந்த்தின் தந்தை வீரராகவன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணை நடந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பள்ளியில் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. அதனால் மாணவர்கள் பள்ளிநேரங்களில் வெளியே சென்று இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலை இருந்துள்ளது.

    இதன் காரணமாகவே மூன்றாம் வகுப்பு படித்த 8 வயது மாணவன் பிரசாந்த்தும், இரண்டாம் வகுப்பு படித்த விக்னேஷும் வெளியில் சென்று இயற்கை உபாதைகளை கழித்து விட்டு, குட்டையை பயன்படுத்தியபோது தவறி விழுந்து இறந்துள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக, காட்டாங்குளத்தூர் உதவி தொடக்கக் கல்வி அதிகாரி விசாரணை செய்து, மாணவர்கள் இறப்பு ஆசிரியர்களின் கவனக் குறைவால் நடந்துள்ளது எனக் கண்டறிந்துள்ளார்.

    அதனால், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் இரண்டு உதவி ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    மேலும், அவர்களை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றமும் செய்துள்ளார். இதற்கு ஆசிரியர்கள் மட்டும் பொறுப்பாக முடியாது, அரசும்தான் பொறுப்பு.

    பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால்தான் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியில் சென்றுள்ளனர்.

    எனவே, மாணவன் பிரசாந்த்தின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சத்தை, எட்டு வாரங்களுக்குள் அரசு வழங்க வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    No comments: