Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 23, 2014

    10ம் வகுப்பு தேர்வு முடிவு: முதல் 3 இடங்களில் வரலாற்று சாதனை!

    2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில், முதல் மூன்று இடங்களை இதுவரை இல்லாத அளவு எண்ணிக்கையில், மொத்தம் 465 மாணவர்கள் பெற்றுள்ளனர்.

    இது கடந்தாண்டை ஒப்பிடுகையில் மிகவும் அதிகம். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில், முதல் மதிப்பெண்ணான 499ஐ, மொத்தம் 19 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் ஒருவர் மட்டுமே ஆண். மீதி அனைவரும் பெண்கள்.


    இரண்டாம் மதிப்பெண் 498ஐ, 125 பேர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 24 பேர் ஆண்கள். மற்ற அனைவரும் பெண்கள்.
    மூன்றாம் மதிப்பெண் 497ஐ, மொத்தமாக 321 பேர் பெற்று அதிர வைத்துள்ளனர். அவர்களில் ஆண்களின் எண்ணிக்கை 75, பெண்களின் எண்ணிக்கை 246.

    தமிழை முதல் பாடமாக எடுத்து படித்து, முதல் மூன்று இடங்களுக்குள் வந்தவர்கள் மட்டுமே 465 பேர். அதேசமயம், தமிழை முதல் பாடமாக எடுத்துப் படிக்காமல், முதல் மூன்று இடங்களுக்குள் வந்த மாணவர்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால், மொத்த எண்ணிக்கை பெருமளவு அதிகரிக்கும்.

    அரசு தேர்வுகளில், முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தி, பரிசுகள் வழங்குவது வழக்கம். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த காலங்களில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால், இந்தளவு எண்ணிக்கையில் மாணவர்களை, தலைமைச் செயலகம் அழைத்து, பரிசுகள் வழங்கும் விழாவை நடத்துவது, நிச்சயம் சவாலான ஒன்றாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    No comments: