ஈரோடு மாவட்டத்தில், கோபி, ஈரோடு என
இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன.
இவ்விரண்டிலும், அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில், 15 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவ, மாணவியர், ப்ளஸ்
1
பயில்கின்றனர். பெரும்பாலும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐந்து சதவீத மாணவ, மாணவியர்,
தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். ப்ளஸ்
1 தேர்வு முடிவுகள், அந்தந்த பள்ளிகளில், கடந்த
ஐந்தாம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வில்
தோல்வி அடைந்தவர்களுக்கு வாய்ப்பாக, ஜூன் மூன்றாம் தேதி
மீண்டும் தேர்வு நடக்கிறது. இதில்
தேர்வு பெற்றால், ப்ளஸ் 2 தேர்வு எழுதலாம்.
தேர்ச்சி
அடைய தவறினால், மீண்டும் ப்ளஸ் 1 படிக்க வேண்டும்.
கோபி கல்வி மாவட்டத்தில், ஐந்தாம்
தேதி, ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
அறிவிக்கப்பட்டன. ஈரோடு கல்வி மாவட்டத்தில்,
நேற்று ஒன்பதாம் வகுப்பு தேர்வு முடிவுகள்
அறிவிக்கப்பட்டன.
No comments:
Post a Comment