வங்க கடலில், அந்தமான் அருகே உருவான குறைந்த அழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. செனனை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:
வலுவான குறைந்த அழுத்தம்
அந்தமான் கடல் பகுதியில் நேற்று முன்தினம் உருவான குறைந்த அழுத்த தாழ்வு பகுதி வலு்ப்பெற்றுள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது. அது, தாழ்வு மண்டல பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, பொன்னேரியில் 8 செ.மீ., சாத்தான்குளத்தில் 6 செ.மீ., மழை பெய்துள்ளது. அடுத்த, 24 மணி நேரத்தில், தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரியில் கன மழை இருக்கும். உள்மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உண்டு. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.
No comments:
Post a Comment