Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 22, 2016

    ஆசிரியர்களுக்கு ஆங்கில திறன் வளர்த்தல் பயிற்சி

    அனைவருக்கும் கல்வி இயக்க ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு ஆங்கில திறன் வளர்த்தல் பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் 630 தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும், 6 முதல் 8 வரை பாடம் கற்பிக்கும் 410 உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கும் ’ஆங்கில திறன் வளர்த்தல்’ பயிற்சி அளிக்கப்படுகிறது. 


    இந்த பயிற்சியை அனைவருக்கும் கல்வி இயக்கம், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் யுனிசெப் நிறுவனம் இணைந்து நடத்துகின்றன.டிச., மாதம் அனைத்து வட்டார வள மையங்களிலும் பயிற்சி நடக்கிறது. 

    பயிற்சியில் கருத்தாளர்களாக செயல்படும் 30 ஆங்கில ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பரமக்குடி வட்டார வள மையத்தில் மாவட்ட அளவிலான பயிற்சி அளிக்கப்பட்டது.

    அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு துவக்கி வைத் தார். உதவி திட்ட அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார். 

    பிரிட்டிஷ் கவுன்சிலில் பயிற்சி பெற்ற ராமநாதபுரம் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சுமதி, திருப்புல்லாணி அன்வர்சஹான், மண்டபம் ஜெகநாதன், நயினார்கோவில் சண்முகநாதன், முதுகுளத்துார் பாக்கிய மரியானா நான்சி, பரமக்குடி புஷ்பலதா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.ஏற்பாடுகளை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர், தரநிலை ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் செய்திருந்தனர்.

    No comments: