Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Wednesday, November 16, 2016

    எல்லையை ஒட்டியுள்ள பள்ளிகளை திறக்க உத்தரவு

    ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள, 174 பள்ளிகளை மீண்டும் திறக்க, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இம்மாதம், 1ம் தேதி, பாக்., படையினர் நடத்திய தாக்குதலில், இரண்டு குழந்தைகள் உட்பட, எட்டு பேர் பலியாகினர்; 22 பேர் காயமடைந்தனர். 


    இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாக்., ராணுவ முகாம்கள் மீது நம் வீரர்கள் தாக்குதல் நடத்தியதில், 14 ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து, இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. 

    இதன் காரணமாக, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள, 174 பள்ளிகளுக்கு, இம்மாதம், 1ம் தேதி முதல், காலவரையற்ற விடுமுறை அளித்து, மாநில அரசு உத்தரவிட்டது. 

    இதனால், ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்குப் பின், 174 பள்ளிகளையும் மீண்டும் திறக்க, மாநில அரசு உத்தரவிட்டுஉள்ளது.

    No comments: