மகப்பேறு விடுப்பில் செல்லும் அரசு ஊழியர்கள், விடுப்பு முடிந்து வரும்போது அவர்கள் ஏற்கெனவே பணிபுரிந்த இடத்திலேயே மீண்டும் பணியமர்த்தவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு முழு ஊதியத்துடன் ஒன்பது மாதங்கள் வரை வழங்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அரசுத் துறைகளில் ஆண் ஊழியர்களுக்கு நிகரான எண்ணிக்கையில் பெண் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். எனவே, விடுப்பில் செல்லும் பெண் ஊழியரின் இடத்தில் உடனடியாக வேறு பணியாளர்கள் அமர்த்தி பணிகள் தொய்வின்றி தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பும் பெண் ஊழியர்கள் பணிபுரிந்த இடத்திலேயே பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment