Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Tuesday, November 29, 2016

    பாரதியார் பல்கலை பதிவாளர் விலகல்; பணி நியமன விவகாரம் விஸ்வரூபம்

    பாரதியார் பல்கலை பணி நியமனத்தில், ஊழல் புகார் எழுந்துள்ள சூழலில், பதிவாளர் பொறுப்பு வகித்த மோகன், திடீரென அப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். கோவை பாரதியார் பல்கலை பதிவாளராக இருந்த செந்தில்வாசன், பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக, ஏப்ரலில் பணி நீக்கம் செய்யப்பட்டார். ஜூலை, 29 முதல், வேதியியல் துறை தலைவர் பேராசிரியர் மோகன், பதிவாளர் பொறுப்பை தற்காலிகமாக ஏற்றார்.


    இந்நிலையில், பதிவாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக, மோகன் அறிவித்துள்ளார். இதற்கான கடிதத்தை, துணைவேந்தர் கணபதியிடம் சமர்ப்பித்துள்ளார். பல்கலையில், 76 பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக, பெரும் சர்ச்சை வெடித்துள்ள நிலையில், இவரது ராஜினாமா, பல்கலை வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


    பேராசிரியர் மோகன் கூறியதாவது: 

    கடந்த, 19ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடத்தக்கூடாது என அரசு அனுப்பிய கடிதம், தாமதமாகவே பல்கலை நிர்வாகத்துக்கு கிடைத்தது. இக்கடிதம், துணைவேந்தருக்கு அனுப்பப்பட்டது. மேலும், தமிழக அரசு சார்பில், சிண்டிகேட் நடத்த கூடாது என்பது தொடர்பாக அனுப்பப்பட்ட, ’பேக்ஸ்’ உத்தரவும், துணைவேந்தர் அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது. 

    ஆனால், இதை துணைவேந்தர் மறுத்து, ’அரசு அனுப்பிய கடிதம் கிடைக்கவில்லை’ என்று கூறுகிறார். தொடர்ந்து, 22ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடத்த, அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை. ஆனால், துணைவேந்தர் மற்றும் பிற உயர் அதிகாரிகளின் உத்தரவின்படி, இக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

    தற்போது, என் மீது தவறை திருப்பும் செயல்பாடுகளால், ராஜினாமா செய்துள்ளேன். இதற்கான கடிதத்தை துணைவேந்தரிடம் சமர்ப்பித்துள்ளேன். தொடர்ந்து, வேதியியல் துறைத் தலைவராக என் பணியைத் தொடர்கிறேன். இவ்வாறு, பேராசிரியர் மோகன் கூறினார்.

    No comments: