Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 22, 2014

    அரசு ஊழியர்களிடம் தி.மு.க., செல்வாக்கு சரிவு: லோக்சபா தேர்தலில் வெட்ட வெளிச்சம்

    அரசு ஊழியர்களிடமும், தி.மு.க.,வின் செல்வாக்கு சரிந்து வருவது, தேர்தல் முடிவுகளில் தெரிய வந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,விற்கு செல்வாக்கு அதிகம். காலம் காலமாக இதுதான் யதார்த்தமாக இருந்து வந்தது. ஆனால், அது தற்போதைய தேர்தல் மூலம் உடைக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க., - தி.மு.க., ஆட்சி மாறி, மாறி வந்தாலும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில், பெரும்பாலானோர் தி.மு.க., ஆதரவாளர்களாக இருந்து வந்தனர்.
    போலீசாரில் அ.தி.மு.க., விற்கு ஆதரவு அதிகம். சமீப காலமாக, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடம், தி.மு.க.,வின் செல்வாக்கு, வேகமாக சரிந்து வருகிறது. அவர்களின் ஓட்டு வங்கியை, அ.தி.மு.க., சத்தமின்றி கைப்பற்றி வருகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போலீசார் ஓட்டு யாருக்கு போகிறது என்பதை, தபால் ஓட்டுகள் மூலம் அறிய முடிகிறது. கடந்த, 2009ம் ஆண்டில் நடந்த லோக்சபா தேர்தலில், தபால் ஓட்டுகளில், 87.2 சதவீதம், தி.மு.க.,விற்கு ஆதரவாக இருந்தது. அ.தி.மு.க., 10.03 சதவீத ஓட்டுகளை மட்டும் பெற்றது. அடுத்து 2011 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் செல்வாக்குசற்று சரிந்து, அந்த கட்சிக்கு, 73.70 சதவீதம், தபால் ஓட்டுகள் பதிவானது. அ.தி.மு.க., ஓட்டு, 22.46 சதவீதமாக அதிகரித்தது. சமீபத்தில் முடிந்த, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., ஓட்டு வங்கி, கணிசமாக அதிகரித்துள்ளது. அதேபோல், பிற கட்சிகளுக்கும் ஓட்டுகள் கூடுதலாக பதிவாகி உள்ளன. தபால் ஓட்டு தி.மு.க.,விற்குதான் என்ற நிலை, இந்த தேர்தலில் மாறியுள்ளது. இம்முறை, 39 லோக்சபா தொகுதிகளிலும், தி.மு.க.,விற்கு, 27,391 தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளது சற்று குறைவாக, அ.தி.மு.க., 23,810 ஓட்டுகளும், பா.ஜ., கூட்டணி, 14,472 ஓட்டுகளும் பெற்றுள்ளன. சில தொகுதிகளில், தி.மு.க.,வை விட, அ.தி.மு.க., தபால் ஓட்டுகளை கூடுதலாக பெற்றுள்ளது. அதேபோல், தர்மபுரி, பொள்ளாச்சி, பெரம்பலூர் தொகுதிகளில், பா.ஜ., கூட்டணி, அதிக ஓட்டுகளை பெற்று உள்ளது. பா.ஜ., கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - ம.தி.மு.க., ஆகிய கட்சிகளுக்கு அதிக அளவில் தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஆனால், தே.மு.தி.க.,விற்கு குறைவான ஓட்டுகளே பதிவாகி உள்ளன. அதேபோல், நோட்டாவிற்கும் கணிசமான ஓட்டுகள் பதிவாகி உள்ளன. ஓட்டுப் பதிவு இயந்திரத்தில், 5.82 லட்சம் பேர், நோட்டாவிற்கு ஓட்டளித்தனர். தபால் ஓட்டு போட்ட வர்களில், 840 பேர், நோட்டாவிற்கு ஓட்டளித்து உள்ளனர். பொதுமக்கள் ஓட்டுகள் மட்டுமின்றி அரசு ஊழியர் ஓட்டுகளிலும், பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பது, தி.மு.க.,வினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    No comments: