Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, May 19, 2014

    தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்

    தனியார் பள்ளிக்கு நிகராக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி அட்மிஷன தீவிரப்படுத்தியுள்ளனர்.


    நவீன வசதி, புதிய வடிவில் கல்வி வழங்குதல், இதர திறன் வளர்த்தல் மூலம் தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை அதிகரிப்பால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. தனியார் பள்ளிகளில் கட்டணம் அதிகரிப்பு மற்றும் அரசு பள்ளிகளிலும் தரமான, இலவச கல்வி வழங்கும் நடவடிக்கையால் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

    தனியார் பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகளில், குறிப்பிட்ட சதவீதத்தினர் நடுநிலை கல்விக்குப்பின் அரசு பள்ளிகளை நாடுகின்றனர். தற்போது அரசு பள்ளிகளில், தமிழக அரசு சார்பில் இலவச சீருடை, செருப்பு, புத்தகம், நோட்டுகள், காம்பஸ் பாக்ஸ், பேக் உட்பட 14 இலவச பொருட்கள் வழங்குவதால், மாணவர்கள் ஊக்கம் பெறுகின்றனர்.

    எம்.எல்.ஏ., எம்.பி., தொகுதி நிதி, தனியார் நிதியுதவி பெற்று பள்ளி கட்டிடங்கள், நவீன வசதியுடன் கழிப்பிடம், குடிநீர் வசதி போன்றவைகளை அரசு பள்ளிகள் பெற்றுக்கொள்வதால், சுகாதார ரீதியான அச்சம் பெற்றோர் மத்தியில் குறைந்தது.

    தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் துவக்க, நடுநிலை பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்தது. ஆண்டுதோறும் அதிகரிக்க வேண்டிய, முதல் வகுப்பு சேர்க்கை குறைந்து கொண்டே சென்றதற்கான முக்கிய காரணம் துவக்க நர்சரி பள்ளியில், தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என கூலி வேலைக்கு செல்பவர்கள் நினைத்ததே.

    இதில் கட்டணம் செலுத்த வழியில்லாதவர்கள் மட்டுமே அரசு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்தனர். இதையடுத்து, தமிழக அரசு வாய்மொழி உத்தரவாக, அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆங்கிலவழிக்கல்வியை துவக்க உத்தரவிட்டது. தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 4.14 லட்சம் மாணவ, மாணவியர்களில் 93 ஆயிரம் பேர் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளனர். நடப்பு 2014-15 கல்வியாண்டில், தனியார் பள்ளிக்கு நிகராக, அரசு பள்ளிகள் அட்மிஷனுக்கு மும்முரம் காட்டி வருகிறது. கட்டாய கல்வி சட்டத்தின் படி, அனைத்து அரசு பள்ளிகளிலும் அட்மிஷன் தீவிரமடைந்துள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கோபி என இரு கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை வலியுறுத்தி அட்மிஷனை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    No comments: