Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Friday, May 16, 2014

    ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு: தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி

    பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆன் லைன் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவதற்கான பயிற்சி தலைமை ஆசிரியர்களுக்கு கடலூரில் வழங்கப்பட்டது. அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய குவிவதைத் தவிர்க்க, அந்தந்த பள்ளிகளிலேயே ஆன் லைன் மூலம் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
    இதற்காக, தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று கடலூரில் பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் ராஜேந்திரன் முன்னிலையில் வேலைவாய்ப்பு அலுவலர் எக்சனலி, உதவி வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் ஆகியோர் பயிற்சியளித்தனர்.
    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் பேசுகையில், "வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு பதியக் கூடாது, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக சங்கேத எண்ணில் பதிவு செய்தால் அந்தந்த மாவட்டத்தில் பதிவாகி விடும். மேலும், ரேஷன் கார்டுகளில் உள்ள விவரங்களை வைத்தே பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளி மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்தாலும், அவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குச் சென்று, மாற்றுத் திறனாளிகளுகான சான்றிதழைக் கொடுத்து பதிவினை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்' என்றார். டி.இ.ஓ.,க்கள் வடிவேல், மல்லிகா மற்றும் மாவட்டத்தில் உள்ள 185 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    No comments: