Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Sunday, May 18, 2014

    மாவட்ட கல்வித்துறையில் நிரம்பும் பணியிடங்கள்

    மதுரை மாவட்ட கல்வித்துறையில் பல முக்கிய பணியிடங்கள் பொறுப்பு அலுவலர்களால் நிரப்பப்பட்டு வருகின்றன. முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களாக இருந்த ரவி (மேல்நிலை பள்ளிகள்) விருப்ப ஓய்வு பெற்றார். சீனிவாசன் (உயர் நிலை பள்ளிகள்) மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்றார் (தற்போது ஓய்வு).

    இப்பணியிடங்களுக்கு குலமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் லோகநாதன், விரகனுார் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கரநாராயணன் ஆகியோர் பொறுப்பு நேர்முக உதவியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், மேலுார் கல்வி மாவட்ட அலுவலர் (டி.இ.ஓ.) சீமான் பதவி உயர்வு பெற்று, கிருஷ்ணகிரி எஸ்.எஸ்.ஏ. முதன்மை கல்வி அலுவலராக மாற்றப்பட்டார். அவருக்கு பதில் சங்கரநாராயணன் டி.இ.ஓ.வாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டார். இவரிடத்தில் மதுரை சத்தியமூர்த்திநகர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பால்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    துணை ஆய்வாளர் பணியிடங்களும் காலி: அரசு பள்ளிகளின் மாணவர்கள் சேர்க்கையை கண்காணிக்கும் பள்ளிகள் துணை ஆய்வாளர் பணியிடங்கள் மதுரை, மேலுார், உசிலம்பட்டி ஆகிய மூன்று கல்வி மாவட்டங்களிலும் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ளன. இப்பணியிடங்களையும் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்

    No comments: