Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, May 10, 2014

    தேர்தல் பணி ஊழியர்கள் வாக்களிக்க தனிவாக்குச்சாவடி : அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை

    தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள் வாக்களிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளை அமைத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்
    சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்
    பணியாளர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன், நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற தேர்தலில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், காவல் துறையினர் தேர்தல் பணியில் இருந்தனர். தேர்தல் முடிவடைந்த பின்பு தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக தபால் மூலம் வாக்களிக்கும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

    இந்த நடைமுறை எளிமையானதாகவும், உறுதிப்படுத்தப்பட்ட வழிகாட்டுதல்களும் இல்லாததால் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் வாக்களிக்க இயலாத நிலை இன்று வரை தொடர்கிறது.

    ஒவ்வொரு தொகுதியிலும் சுமார் 8ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை அரசுப் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


    வாக்கு எண்ணிக்கை வரும் 16ம் தேதி நடைபெற உள்ளதால் இனி வாக்குச்சீட்டுகளை அனுப்பி தபால் வாக்களிப்பது என்பது இயலாத நிலையாக உள்ளது. எனவே, தேர்தலில் பணியாற்றிய ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் தங்களது வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமைகளை நிறைவு செய்ய மாநிலம் முழுவதும் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு பிரத்யேக வாக்குச்சாவடி அமைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    No comments: