Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Thursday, May 8, 2014

    பேப்பர் விலை உயர்வு: நோட்ஸ் விலை 25 சதவீதம் உயர்வு

     தமிழகத்தில், பேப்பர் உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலை உயர்வு, மின்தடை ஆகியவற்றால், "நோட்ஸ்'கள் விலை, 25 சதவீதம் உயர்ந்துள்ளன. தமிழக அரசு, மாணவர்களுக்கு, புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவற்றை, இலவசமாக வழங்கி வருகிறது. நோட்ஸ்களை மட்டும், மாணவர்களுக்கு,
    பெற்றோர், வெளி மார்க்கெட்டில் வாங்கி தருகின்றனர். 3ம் வகுப்பு முதல் அனைத்து வகுப்பு பாடங்களுக்கும், தனியார் நிறுவனங்கள், நோட்ஸ்களை தயாரித்து விற்பனை செய்கின்றன. தமிழகத்தில், கோடை விடுமுறைக்கு பின், இன்னும், 25 நாட்களில், பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், நோட்ஸ்கள், விற்பனைக்கு வரத்துவங்கி உள்ளன. குறிப்பாக, பொதுத்தேர்வு நடக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கான நோட்ஸ்கள், அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. இந்த நோட்ஸ்களின் விலை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. நோட்ஸ் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும், பேப்பர், அட்டை, கலிங்கம், நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வும், மின்தடையாலும், நோட்ஸ் விலையை அதிகரிக்க செய்துள்ளதாக, தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டு, 3ம் வகுப்பு 9ம் வகுப்பு நோட்ஸ்களின், குறைந்த பட்ச விலை, 65 ரூபாயில் இருந்து துவங்கியது. ஆனால், நடப்பாண்டு, 85 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல், 10ம் வகுப்பு, பிளஸ் 2 நோட்ஸ்கள், 80 ரூபாயில் இருந்து, 110 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    No comments: